திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
துணிவு படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கமல்ஹாசன், பிரபாஸ் உடன் நடிக்கும் கல்கி 2898 ஏடி, மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் ஆகிய படங்களில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இதனால் வினோத் இயக்கும் படத்தில் இப்போதைக்கு அவர் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே தான் கதை கூறியுள்ள தனுஷ், யோகி பாபு ஆகியோரிடத்தில் மீண்டும் அவர் கால்சீட் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பிஸியாக இருப்பதாக சொல்லி விட்டனர். இதனால் ஏற்கனவே தான் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த கார்த்தியிடம் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு கால் சீட் கேட்டு வருவதாகவும், இன்னொரு பக்கம் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தனது மூன்று படங்களில் நடித்த அஜித் குமாரை மீண்டும் இயக்க கால்சீட் கேட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன