ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியத் திரையுலகத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ள 'சலார்' படம் இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்கள்தான். ஆனால், அந்தப் படங்கள் வியாபார ரீதியாக 'பாகுபலி 2' படம் பெற்ற வசூலைப் பெற முடியவில்லை. சொல்லப் போனால் நஷ்டத்தைக் கொடுத்துள்ள படங்களாகவே இருந்துள்ளன.
“சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ்” ஆகிய மூன்று படங்களுமே மொத்தமாக தோல்விப் படங்கள்தான். 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டும் லாபத்தைக் கொடுத்ததாகச் சொன்னார்கள். அந்தப் படங்களை பிரபாஸ் நிறையவே பிரமோஷன் செய்தார். ஆனாலும், அவை படத்தின் வசூலுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யவில்லை.
இந்நிலையில் 'சலார்' படத்தின் பிரமோஷன் சுற்றுப்பயணம் எதற்கும் வர மாட்டேன் என பிரபாஸ் சொல்லிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது திடீர் அறிவிப்பால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருகிறார்கள். படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் எந்தவிதமான சுற்றுப்பயணமும் இருக்காது என்றே தெரிகிறது.
நடிகர்கள், நடிகைகள் ஆகியோரை வீடியோ இன்டர்வியூ எடுத்து அதை மட்டும் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.