பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இந்த விழா வருகிற 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் 50 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை நிதி வழங்கப்படும். இந்த ஆண்டு 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில், நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் இ.தங்கராஜ், இயக்குநர்கள் மோகன் ராஜா, யூகி சேது உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் வெள்ள நிவாரண பணிகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை.