சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, தமிழில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் ஒரு சில படங்கள் ஹிட் அடிக்க பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் ஐந்து படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு இந்த வருடம் இதுவரையிலும் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தை தொடர்ந்து வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஹிந்தியில் மட்டும் தேவி என்கிற படத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவுக்கு பூஜா ஹெக்டே சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அங்கே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவருக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி துபாயில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார் ஆனால் பூஜா ஹெக்டேவின் சோசியல் மீடியா குழுவினர் இந்த தகவலில் உண்மை எதுவும் இல்லை.. யாரோ ஏதோ காரணத்திற்காக இப்படி தவறான தகவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்த செய்தியை மறுத்துள்ளனர்.