ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, தமிழில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் ஒரு சில படங்கள் ஹிட் அடிக்க பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் ஐந்து படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு இந்த வருடம் இதுவரையிலும் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தை தொடர்ந்து வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஹிந்தியில் மட்டும் தேவி என்கிற படத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவுக்கு பூஜா ஹெக்டே சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அங்கே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவருக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி துபாயில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார் ஆனால் பூஜா ஹெக்டேவின் சோசியல் மீடியா குழுவினர் இந்த தகவலில் உண்மை எதுவும் இல்லை.. யாரோ ஏதோ காரணத்திற்காக இப்படி தவறான தகவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்த செய்தியை மறுத்துள்ளனர்.