தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களை தயாரித்த 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர்.பிரபு திலக், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி.ஆனந்த் ஜோசப் ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'யாவரும் வல்லவரே'. சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி உள்ளர். படம் பற்றி அவர் கூறும்போது “இது ஹெப்பர்லிங்க் ஜார்னரில் உருவாகி உள்ள படம். இதில் 4 தனிதனி கதைகள் இருக்கிறது. அவைகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து இறுதியில் ஒரு புள்ளியில் இணைகிற மாதிரியான திரைக்கதை. இதில் சமுத்திரகனி, மற்றும் யோகி பாபு நடிக்கும் கதைகள் முன்னணியில் இருக்கும். படம் வருகிற 29ம் தேதி வெளிவருகிறது” என்றார்.