இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கிட்டத்தட்ட 49 படங்களில் நடித்து முடித்து விட்ட நடிகர் தனுஷ் ஏற்கனவே 'ப பாண்டி' என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறினார். அதன்பிறகு சிறிய இடைவெளிவிட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதோடு தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இதற்கு பெயரிட்டுள்ளனர்.
தனுஷின் இயக்கம் பற்றி நடிகர் எஸ்.ஜே..சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், “அவரு சூப்பர் டைரக்டரும் கூட... தனுஷுக்கு டைரக்ஷன் மேல என்ன வெறி ! என்ன அர்ப்பணிப்பு ! அவர் வேற லெவல். தனுஷ் 50வது படத்தின் கதையும் வித்தியாசமான ட்ரீட்மென்ட்டும் சர்வதேச தரத்தில் இருக்கிறது. அவரது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார்.