இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த இரண்டு படங்களும் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும், டிவியிலும் அதிகம் ரசிக்கப்பட்ட படங்கள். அந்தப் படத்தைப் பற்றி பலரும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியவை.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த 'சலார்' படம் 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்படுத்திய பரபரப்பை சிறிது கூட ஏற்படுத்தவில்லை. தமிழ் ரசிகர்களிடம் அப்படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. 'கேஜிஎப்' சாயலிலேயே 'சலார்' படத்தை எடுத்திருந்தார் பிரசாந்த் நீல் என்பதுதான் பலரது விமர்சனங்களில் காணப்பட்டது.
தமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகாவிலும் இப்படம் வியாபார ரீதியாக பெரிய வசூலைக் குவிக்க முடியாமல் போனது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும்தான் படத்திற்கு வரவேற்பும், வசூலும் கிடைத்தது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த பான் இந்தியா படங்களான 'சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ்,' ஆகிய படங்கள் தமிழில் வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை. அந்த வரிசையில் 'சலார்' படமும் சேர்ந்துவிட்டது. அவரது நடிப்பில் அடுத்து வர உள்ள'கல்கி 2898 எடி' படமாவது அதை மாற்றுமா ?.