ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ரோஹித் ஷெட்டி. தொடர்ந்து சல்மான்கான், ஷாரூக்கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி, சிங்கம் படத்தின் தொடர் பாகங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர். இந்த நிலையில் ரோஹித் ஷெட்டியும் முதன்முறையாக வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பி இந்தியன் போலீஸ் போர்ஸ் என்கிற வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.
சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ள இந்த வெப் சீரிஸில் விவேக் ஓபராய் முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக ஷில்பா ஷெட்டி ஒரு போலீஸ் கமாண்டோவாக நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில் ஒரு ஆச்சரியம் இருப்பதாக தற்போது கூறியுள்ளார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
அதாவது இந்த கதாபாத்திரத்தை முதலில் ஒரு ஹீரோ நடிப்பதாகத்தான் உருவாக்கி இருந்தாராம் ரோஹித் ஷெட்டி. ஆனால் எதற்காக வழக்கமாக கதாநாயகர்களையே நடிக்க வைக்க வேண்டும் என நினைத்த ரோஹித் ஷெட்டி. அப்படியே கதாநாயகி நடிக்கும் விதமாக மாற்றி விட்டார்.
அப்படி மாற்றியதுமே அதற்கு தோதாக ஷில்பா ஷெட்டி தான் அவரது மனதில் பளிச்சிட, அவர் எதிர்பார்த்தபடியே தற்போது இந்த வெப் சீரிஸில் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி. மேலும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி கூறும்போது பாலிவுட்டில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு என இரண்டு கதாநாயகிகள் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் ஷில்பா ஷெட்டி என்று கூறியுள்ளார்.