துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
பாரத பிரதமர் நரேந்திர மோடி லட்சத் தீவிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அந்த வீடியோ, போட்டோ சமீபத்தில் வெளியானது. இதனை மாலத்தீவு அமைச்சர்கள், எம்.பிக்கள் விமர்சனம் செய்தனர். பிரதமரை அவதூறு செய்து கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் பலர் வற்புறுத்தினர். இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவு செல்வதையும், அங்கு ஓட்டல்களில் முன்பதிவு செய்து இருந்ததையும் ரத்து செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனாவும் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் பிக்பாஸ் மற்றும் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பிசியாக இருந்ததால் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க மாலத்தீவு செல்ல இருந்தேன். தற்போது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டேன். பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதை செய்யவில்லை. நமது பிரதமரை அவர்கள் தவறாக பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பின் விளைவுகளை மாலத்தீவு சந்தித்து வருகிறது. இதனாலேயே நானும் பயணத்தை ரத்து செய்தேன். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவு செல்ல இருக்கிறேன்'' என்றார்.