ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பான் இந்தியா படம் 'சலார்'. இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸ் மிகக் குறைவான வசனங்களே பேசியிருக்கிறார் என ஒரு ரசிகர் படம் வெளிவந்த போதே குறிப்பிட்டிருந்தார். “சலார்' படத்தில் பிரபாஸ் 100 முதல் 110 வரிகள் அதாவது ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் வசனமே பேசியிருக்கிறார். தோராயமாக 3 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டுமே அந்த வசனங்கள் இருக்கும்,”.
ஓடிடியில் வந்த பிறகு அதே ரசிகர் பிரபாஸ் பேசிய வசனங்களை எடிட் செய்து ஒரு வீடியோவாகவே வெளியிட்டுள்ளார். “சலார்' படத்தில் பிரபாஸ் பேசிய வசனங்கள் தோராயமாக 4 நிமிடங்கள் மட்டுமே சில இடைவெளிகளுடன் வருகிறது. இடைவெளியில்லாமல் 2 நிமிடம் 35 வினாடிகள் இருக்கிறது,” என கணக்கிட்டு சொல்லியிருக்கிறார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டாம் பாகத்திலாவது இரண்டு பக்கங்களுக்கு மேல் வசனம் பேசுவாரா பிரபாஸ் ?.