ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வாகைசூட வா, மௌனகுரு, கண்பேசும் வார்த்தைகள், அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒருநாள், புலிவால், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. தற்போது 'தூக்குதுரை' படத்தில் நடித்துள்ளார். இனியா சினிமாவில் நடிப்பதோடு டிசைனிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் தொடங்கிய 'அனோரா ஸ்டூடியோ' தனது முதல் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது : சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பவில்லை. கடவுள் கொடுத்த அறிவை வைத்து பிசினஸிலும் கவனம் செலுத்த முடிவு செய்துதான், இந்த ஸ்டுடியோவை தொடங்கினேன். இங்கு வாடகைக்கு உயர்தர பெண்கள் ஆடைகள் கிடைக்கும். போட்டோ ஷூட் எடுக்கலாம். ஆடை தயாரிப்பு வேலைகள் நடக்கிறது. இந்த பிசினஸ் எனக்கு கைகொடுத்துள்ளதால், தற்போது இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பேஷன் டிசைனிங் படிக்கப் போகிறேன். இந்த பிசினஸை ஆன்லைனிலும் நடத்துகிறேன். இப்போது துபாயில் இதை விரிவுபடுத்த இருக்கிறேன்.
சினிமா கேரியரை பொருத்தவரையில் 'தூக்குதுரை' படத்தில் யோகி பாபுவுடன் நடித்துள்ளேன். மலையாளத்தில் ஒரு படம், வெப்சீரிஸ் என நடித்து வருகிறேன். பிசினஸில் ஈடுபட்டாலும் சினிமாவை மறக்க மாட்டேன். பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். வாய்ப்பு தேடி யாரையும் அணுகியது இல்லை. என்னை தேடிவரும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன். வருடத்திற்கு எனது நடிப்பில் நான்கைந்து படங்கள் வருகின்றன. எதிர்காலத்தில் படம் டைரக்டு செய்யும் ஆர்வம் இருக்கிறது. கதையும் தயாராக உள்ளது. வாய்ப்பு அமையும்போது படம் இயக்குவேன். என்றார்.