புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. தெலுங்கு திரை உலகையும் தாண்டி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் கூட மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா இருவரும் இந்த படத்தில் ஆடிய நடனமும், பாடலும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட வைத்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் விதமாக உருவாகி வருகிறது. தமிழகத்தில் புஷ்பா திரைப்படம் இந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியடைய இயக்குனர் எழிலும் ஒரு காரணம் என தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய தகவலை கண்டுபிடித்து கூறியுள்ளார்.
துள்ளாத மனமும் துள்ளும் படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்த எழில் தனது திரையுலக பயணத்தில் 25வது வருடத்தை எட்டியுள்ளார். தற்போது அவர் இயக்கி வரும் தேசிங்கு ராஜா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அவரது 25வது வருட விழாவும் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இப்போது பெரிய அளவில் உள்ள விஜய், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு அவர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார் எழில். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றால் அதற்கு இயக்குனர் எழிலும் ஒரு காரணம்தான்” என்றார்.