தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். ஆனாலும் அருள்நிதிக்கு அரசியல் ஆசை இன்றி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 'வம்சம்' படத்தில் அறிமுகமான அவர் அதன் பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அருள்நிதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பிறகு கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த மற்றும் லட்டு பிரசாதங்களை பெற்றுக் கொண்டார். 'டிமாண்டி காலனி' 2ம் பாகத்தின் வெற்றிக்கான வேண்டுதலுக்காக அவர் திருப்பதி வந்ததாக நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.