இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்காலிகமாக DNS என அழைக்கின்றனர். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கின்றார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு 'தாராவி' என தலைப்பு வைத்ததாக தகவல் பரவி வந்தது. இப்போது கிடைத்த தகவலின் படி, இதுவரை இந்த படத்திற்கு எந்த தலைப்பும் வைக்கவில்லை என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்தது. அப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ்.