தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பண்முக திறமைகளை கொண்ட நடிகர். தனது 50வது படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். தற்போது மூன்றாவதாக ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் இன்றைய இளைஞர்களின் காதலை மையப்படுத்தி உருவாகிறது. இதுதவிர சேகர் கம்முலா இயக்கும் தனது 51வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைதளத்தில் தனுஷ் அடுத்து இயக்கி வரும் படத்தில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற உள்ளதாக பரவியது. இதனைத்தொடர்ந்து தனுஷின் மேலாளர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "தனுஷ் சாரின் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தேவைப்படுகிறது இதற்கு தொடர்பு கொள்ள என் பெயர், மொபைல் நம்பர் என சமூக வலைதளங்களில் பரவியது உண்மை அல்ல முற்றிலும் பொய். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.