இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பண்முக திறமைகளை கொண்ட நடிகர். தனது 50வது படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். தற்போது மூன்றாவதாக ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் இன்றைய இளைஞர்களின் காதலை மையப்படுத்தி உருவாகிறது. இதுதவிர சேகர் கம்முலா இயக்கும் தனது 51வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைதளத்தில் தனுஷ் அடுத்து இயக்கி வரும் படத்தில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற உள்ளதாக பரவியது. இதனைத்தொடர்ந்து தனுஷின் மேலாளர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "தனுஷ் சாரின் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தேவைப்படுகிறது இதற்கு தொடர்பு கொள்ள என் பெயர், மொபைல் நம்பர் என சமூக வலைதளங்களில் பரவியது உண்மை அல்ல முற்றிலும் பொய். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.