தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கை போலவே மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வரவேற்பு பெற்ற இந்த படம் பாலிவுட்டிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
கடந்த மாதம் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகரான ஜெகதீஷ் பண்டாரி என்பவர் துணை நடிகை ஒருவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஏற்கனவே ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாலும், ஜெகதீஷ் காரணமாக படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தாலும் தற்போது அதை ஈடு செய்யும் விதமாக புஷ்பா 2 படக்குழுவினர் இரண்டு யூனிட்டுகளாக பிரிந்து காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.