துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயடு லோஹர். 'முகில்பேட்' என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 'தெல்லூரி' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தற்போது 'நிலா வரும் வேளை' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார். மிராக்கிள் மூவீஸ் சார்பில் ஸ்ருதி செல்லப்பா தயாரிக்கிறார்.
இதனை 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை இயக்கிய ஏ.ஹரிகரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது த்ரில்லர் வகை கதை. படத்தில் காடு ஒரு முக்கிய லொகேஷனாக இருக்கும். அதுதவிர பல லொகேஷன்களில் படமாக்குகிறோம். இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கவில்லை. தமிழில் எடுத்துவிட்டு, பிறகு தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். இரு மொழி ரசிகர்களுக்கும் இந்த கதை, கனெக்ட் செய்யும் வகையில் இருக்கும். மலையாளத்தில் 19ம் நூற்றாண்டு படத்தில் நடித்தவர் கயடு லோஹர். இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவர்தான் ஹீரோயின். 1970களில் நடக்கும் கதையாக இது உருவாகிறது. என்றார்.