தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் 'மறுபடியும் நீ' என்கிற முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 14ந் தேதி மாலை 6 மணியளவில் வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது இந்த பாடல் நடிகர் சித்தார்த் குரலில் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளனர். சித்தார்த் ஒரு சில நிகழ்ச்சிகளில் சில பாடல்களைக் பாடியுள்ளார். இது அல்லாமல் ஏற்கனவே ராமின் இயக்கத்தில் வெளிவந்த 'தரமணி' படத்தில் 'உன் பதில் வேண்டி' என்கிற பாடலை சித்தார்த் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.