இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். அதையடுத்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே கபடி பயிற்சி எடுத்து வருகிறார் துருவ் விக்ரம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மார்ச் 15 ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் தொடங்க உள்ளது. இந்த படத்தை 80 நாட்களில் படமாக்கி முடிக்கவும் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், மலையாளத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெயஹே என்ற படத்தில் நாயகியாக நடித்த தர்ஷனா ராஜேந்திரன் என்பவர் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தமிழில் கவண், இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாக உள்ளது.