இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 30 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் இந்த படத்தின் மூலம் ஏ.ஆர் ரஹ்மான் மறுபிரவேசம் செய்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
எழுத்தாளர் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இதன் புரோமோஷன் நிகழ்ச்சிகளும் துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக ஆடுஜீவிதம் படத்திற்கான வெப்சைட்டை தொடங்கியுள்ளனர். இதன் துவக்க விழா நிகழ்வின் கலந்து கொண்டு இந்த வெப்சைட்டை துவங்கி வைத்தார் ஏ.ஆர் ரஹ்மான்.
அப்போது அவர் பேசும்போது, “மலையாளத்தில் யோதா படத்திற்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி உள்ளேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடித்த மலையான் குஞ்சு என்கிற படத்திற்கு இசையமைத்து இருந்தேன். ஆனாலும், ஒரு இசையமைப்பாளருக்கான படம் என்றால் அது ஆடு ஜீவிதம் படம் தான். அந்த அளவிற்கு படம் முழுவதுமே இசைக்கு வேலை வைக்கும் விதமாக உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகம்” என்று கூறியுள்ளார்.