ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம், விஜய் ரசிகர்கள் கோட் படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விஜய் ரசிகர் கோட் படத்தின் சிங்கிள் எப்போது வரும் என அவரிடத்தில் கேட்டபோது, விரைவில் வெளியாகும் என்று ஒரு பதில் கொடுத்திருந்தார். அதையடுத்து இப்போது அதே ரசிகர், மீண்டும் சீக்கிரம் என்று சொன்னீர்கள், ஒரு வாரம் ஆகியும் இன்னும் சிங்கிள் அப்டேட் வரவில்லையே என்று கேட்டதோடு, ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, சொல்லலாம் என்று தான் நினைத்தேன். இப்போ இதுக்கு மேல எப்படி என்று நீங்களே சொல்லுங்க என்று கூறியதோடு, விஜய்னா ப்ளட்ஸ் என்ற ஹேஸ்டேக்கை பதிவு செய்துள்ளார். இதை அடுத்து விஜய்யின் மற்ற ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடத்தில், தங்கள் சார்பில் மன்னிப்பு கேட்டதோடு, இது போன்ற தரம் கெட்ட நபர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.