ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வாரம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் 10 நண்பர்கள் கொண்ட குழு, குணா குகை பகுதிக்கு செல்லும்போது அதில் ஒருவர் குகைக்குள் தவறி விழுந்து விடுவதும் அவரைக் காப்பாற்ற நண்பர்கள் போராடுவதும் தான் கதை. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் கமலின் குணா படம் புகழ்பெற்ற குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுடன் அந்த படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு என்கிற பாடலும் அழகாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
மலையாளத்தில் வெளியானாலும் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வையே இந்த படம் கொடுத்தது. அதனால் தமிழகத்திலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் குணா பட இயக்குனர் சந்தான பாரதியுடன் இணைந்து பார்த்து ரசித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சிதம்பரம் உள்ளிட்ட மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவினரை பாராட்டினார். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷும் இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து வாழ்த்தினார். இன்னும் பல பிரபலங்கள் சோசியல் மீடியாக்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன்பு இதே போல பாய்ஸ் என்கிற ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சித்தார்த் இந்த மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து படம் குறித்து சிலாகித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து 'பாய்ஸ் மல்டிவெர்ஸ்' என குறிப்பிட்டுள்ள இயக்குனர் சிதம்பரம், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் பார்த்து தாங்கள் எல்லாம் எப்படி கவரப்பட்டோம் என்பது குறித்து நடிகர் சித்தார்த்துடன் இரவில் நீண்ட உரையாடல் நடத்தியதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.