ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

2015ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'இறுதிச் சுற்று' படத்திற்கு சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு, சிறந்த நடிகருக்கான பரிசு, சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு, சிறந்த இயக்குனருக்கான பரிசு, சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான பரிசு, சிறந்த பின்னணி குரல் பெண் ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான பரிசு வென்ற நடிகர் மாதவன் அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இறுதிச் சுற்று திரைப்படத்திற்காக 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கி கவுரவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . மேலும் வெற்றி பெற்ற சக வெற்றியாளர்களான சுதா, ஜோதிகா, ரித்திகா, கவுதம் கார்த்திக், அரவிந்த்சுவாமி, ஜிப்ரான் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.