இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சென்னை: தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‛36 வயதினிலே' படத்தில் நடித்ததற்காக ஜோதிகா வென்றார். இவர் தவிர மோகன்ராஜா, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட மற்ற கலைஞர்களும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு திரைத் துறையினருக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடையில் சில ஆண்டுகள் தடைபட்டு இருந்த நிலையில் மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த திரைப்பட விருதுகள் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ராஜரத்தினம் கலையரங்கில் நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்த ஜோதிகா படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த படம் சிறப்பு பரிசு உட்பட 7 விருதுகள் கிடைத்துள்ளன. அதே போன்று ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், சிறந்த படம் உட்பட 6 விருதும், மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் சிறந்த நடிகர், இயக்குனர் உள்ளிட்ட 6 விருதுகளையும் வென்றுள்ளன.
சிறந்த நடிகர் சிறப்பு பரிசை ‛வை ராஜா வை' படத்தில் நடித்த கவுதம் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் மோகன் ராஜாவுக்கு தனி ஒருவன் படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருது வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை உத்தம வில்லன், பாபாநசம் படங்களுக்காக ஜிப்ரான் பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த குணசித்தர நடிகருக்கான விருது (அபூர்வ மகான் ) தலைவாசல் விஜய்-க்கு வழங்கப்பட்டு உள்ளது.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது நடிகர் சிங்கம்புலிக்கு அஞ்சுக்கு ஒன்னு படத்திற்காக வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது நடிகை தேவதர்ஷினிக்கு ( 36 வயதினிலே, திருட்டு கல்யாணம் )வழங்கப்பட்டு உள்ளது. சிறந்த இயக்குனர் சுதா கொங்காரா ( இறுதிச்சுற்று) , சிறந்த குணச்சித்திர நடிகை கவுதமி (பாபநாசம் ) வழங்கப்பட்டது.
சிறந்த படம் முதல் பரிசு தனி ஒருவன், இரண்டாம் பரிசு பசங்க, மூன்றாம் பரிசு பிரபா -க்கு வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு, காசோலை தங்கப்பதக்கம் நினைவு பரிசு சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. விருதாளர்களுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.