இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரித்திகா சிங் நடித்துள்ள தெலுங்கு படம் 'வளரி'. இதில் ஸ்ரீகாந்த், உத்தேஜ், சுப்பராஜு, இளவரசி சஹஸ்ரா, பர்னிதா ருத்ர ராஜு உள்பட பலர் நடித்துள்ளனர். மிருத்திகா சந்தோஷினி இயக்கி உள்ளார். விஷ்ணு, ஹரி கவுரா இசை அமைத்துள்ளனர். இந்த படம் நேற்று ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.
படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் கடற்படை கேப்டன். அவர் தனது மனைவி ரித்திகா சிங் மற்றும் மகனுடன் கிருஷ்ணாப்பட்டினத்தில் ஒரு பழைய பங்களாவில் வசித்து வருகிறார். ரித்திகாவிற்கு 13 வயது சிறுவன் தன் பெற்றோர்களை கொல்வது போன்று அடிக்கடி கனவு வருகிறது. அதை தொடர்ந்து பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. தன் மகன் தன்னையும், தன் கணவரையும் கொன்று விடுவனோ அதனால்தான் இந்த கனவு வருகிறதோ என்று ரித்திகா நினைக்கிறார். உண்மையில் அந்த பங்களாவில் என்ன நடந்தது? இது ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் எப்படி தொடர்புடையது? ரித்திகாவுக்கு ஏன் இப்படி ஒரு வித்தியாசமான கனவு வருகிறது? என்பதுதான் படத்தின் கதை.