23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
இந்தியத் திரையுலகத்தின் சாதனையாளர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது 'தாதா சாகேப் பால்கே விருது'. 1969 முதல் இந்த விருது வழஙகப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவுடன் தொடர்பு கொண்டவர்களில் “எல்வி பிரசாத், பி நாகிரெட்டி, நாகேஸ்வரராவ், சிவாஜிகணேசன், டி ராமாநாயுடு, கே பாலசந்தர், கே விஸ்வநாத், ரஜினிகாந்த்,” ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் எக்ஸ் தளத்தில், “பின் வருபவர்கள் எப்போதோ தாதா சாகேப் பால்கே விருதுகளை வாங்கியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. பி. சுசீலா, எஸ் ஜானகி, எஸ்பி பாலசுப்பிரமணியம், கேஜே யேசுதாஸ், இளையராஜா, ஏஆர் ரஹ்மான்…அவர்களில் சிலர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.