திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ‛கேம்சேஞ்சர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பன்மொழிகளில் தயாராகும் இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப்படத்திற்கு பின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இயக்குனர் சுகுமார் வசனத்தில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் அல்லது மேயில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு 'பெடி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.