ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தங்கர்பச்சான் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி மற்றும் பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த படம் 'அழகி'.
சிறு வயதில் காதலித்து பிரிந்து போன காதலியை சில பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் ஒரு முன்னாள் காதலனைப் பற்றிய கதைதான் 'அழகி'. வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காதலனும், வேறொரு ஆணைத் திருமணம் செய்து கொண்ட காதலியும் மீண்டும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதையும் இயல்பாய் காட்டிய படம்.
அப்போது பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற ஒரு படம். 22 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் வடிவில் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்கள். அது பற்றி படத்தின் நாயகன் பார்த்திபன், “22 வருசங்களுக்கு பிறகு இந்த மாசம் 29ம் தேதி மீண்டும் என் '#அழகி'யை பாக்க போறேன்!.. என் மனசுக்குள்ள இருக்குற ஆசை யாருக்கு புரியும்..?!.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானவை. இளையராஜாவின் மகளும், மறைந்த பாடகியுமான பவதாரிணி இப்படத்தில் “டமக்கு டமக்குடம், ஒளியிலே தெரிவது தேவதையா” ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். சாதனா சர்கம் பாடிய 'பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி', இளையராஜா பாடிய 'உன் குத்தமா என் குத்தமா' மற்றும் புஷ்பவனம் குப்புசாமி, ஸ்வர்ணலதா பாடிய 'குருவி குடைஞ்ச கொய்யாபழம்' ஆகிய பாடல்களும் இப்படத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.