துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று விஜய் விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு சென்றார். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தனர். அதோடு படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிலும் ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளார்களாம். இதன் காரணமாக கோட் படத்தின் படப்பிடிப்புக்கு ரசிகர்களால் இடையூறு ஏற்படாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு நடத்த திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.