5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தமிழில் ‛சைத்தான், கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அருந்ததி நாயர். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், கோவளம் சாலையில் தனது சகோதரர் உடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று மோதியதில் அருந்ததி மற்றும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து மூன்று தினங்களுக்கு முன்னர் நடந்தது. தற்போது தான் இது வெளியே தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அருந்ததியின் சகோதரி ஆர்த்தி வெளியிட்ட பதிவில், ‛‛மூன்று நாட்களுக்கு முன் விபத்து ஒன்றில் அருந்ததி பலத்த காயமடைந்து உயிருக்காக போராடி வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து ஐசியுவில் வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வருகிறார்'' என தெரிவித்துள்ளார்.