தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், 'புஷ்பா' படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். தற்போது 'புஷ்பா 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. அங்கு படப்பிடிப்புக்காக வாகனங்களை ஓட்ட வேண்டிய காட்சிகளில் அல்லு அர்ஜுன் நடிக்க வேண்டி உள்ளதாம். அதற்காக எந்தவிதமான சட்ட சிக்கல்களும் வந்துவிடக் கூடாது என சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பித்திருந்தார் அல்லு அர்ஜுன். அந்த லைசென்ஸை கைரதாபாத் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆர்டிஓ அதிகாரிகளை சந்தித்து அதற்குரிய ஆவணங்களில் கையொப்பமிட்டு லைசென்ஸைப் பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன். எந்த பிரபலமாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் லைசென்ஸை நேரில் சென்று பெறுவதே சட்டவிதி முறை. அதன்படியே அல்லு அர்ஜுனும் சென்று அதை வாங்கியுள்ளார். தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கைரதாபாத் ஆர்டிஓவில்தான் லைசென்ஸ் வாங்கியுள்ளார்கள்.