இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பரசுராம் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'பேமிலி ஸ்டார்' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, படம் குறித்து பல நெகட்டிவ்வான கருத்துக்களை வேண்டுமென்றே சிலர் பதிவிடுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் மேனேஜர் அனுராக் பர்வதனேனி, விஜய் தேவரகொண்டா ரசிகர் மன்றத் தலைவர் நிஷாந்த்குமார் இது குறித்து புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சில குரூப்கள், சில கணக்குகள் ஆகியவற்றின் ஸ்கிரீன் ஷாட் உடன் அந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்திற்கான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜுவும் கருத்து தெரிவித்துள்ளார். “சில நெகட்டிவ்வான விமர்சனங்களால்தான் ஒரு தரப்பு ரசிகர்கள் படத்திற்கு வரவில்லை. அந்த நெகட்டிவ் விமர்சனங்கள், அந்த முட்டாள்தனமான விமர்சனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கேரளாவில் படம் வெளியான மூன்று நாட்கள் வரை விமர்சனங்கள் போடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது போல இங்கும் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் திரையுலகம் வாழ முடியாது,” எனக் கூறியுள்ளார்.
தில் ராஜுவின் இந்தக் கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.