சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பஹத் பாசில். ஒரு பக்கம் வில்லத்தனம், இன்னொரு பக்கம் காமெடி என கலந்து கட்டி நடித்து வரும் பஹத் பாசில் சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் அவரது ரங்கா கதாபாத்திரத்திற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான 'ஆடுஜீவிதம்' படத்தில் பிரித்விராஜின் நடிப்பு குறித்து பஹத் பாசிலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “12 வருடங்களாக கதையுடன் அவர் பயணித்து வந்துள்ளார். ஆறு வருடங்களாக அந்த கதாபாத்திரத்தை மனதில் தாங்கி பயணித்துள்ளார். ஆனால் ஒரு கதாபாத்திரத்திற்காக இத்தனை வருடங்கள் எடுத்துக் கொள்கின்ற நபர் நான் இல்லை. அதிகபட்சம் ஒரு கதையுடன் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை மட்டுமே என்னால் பயணிக்க முடியும்” என்று கூறியுள்ளார் பஹத் பாசில்.