தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு' என்ற சோகம் இந்த வாரம் முடியுமா, அடுத்த வாரம் முடியுமா எனப் பேசிப் பேசி போய்க் கொண்டே இருக்கிறது. இந்த 2024ம் ஆண்டின் நான்கு மாதங்கள் முடிய உள்ள நிலையில் லாபகரமான படங்கள் என ஒரு படத்தைக் கூட குறிப்பிட முடியாமல் உள்ளது.
கடந்த வாரம் ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'டியர்', விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ஒரு கோடி வசூலையாவது கடந்ததா என்பதற்கான பதிலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கிடைக்கவில்லை.
அதே சமயம் கடந்த வாரம் வெளியான இரண்டு மலையாளப் படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஜித்து மாதவன் இயக்கத்தில், பஹத் பாசில், சஜின் கோபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஆவேஷம்' படம் 60 கோடி வசூலைக் கடந்துள்ளது. பிரணவ் மோகன்லால், தியன் சீனிவாசன், நிவின் பாலி, பாசில் ஜோசப், வினீத் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளிவந்த 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மலையாள சினிமாவில் தொடர்ந்து சில படங்கள் 50 கோடி வசூலைக் கடந்து ஓடுவது மற்ற திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களே அதற்குக் காரணம் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.