தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக அதற்கு இணையாக கருதப்படுவது கிராமி விருதுகள் தான். வரும் பிப்ரவரி மாதம் 67வது கிராமி விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக உலகெங்கிலும் உள்ள படங்கள் பல்வேறு போட்டி பிரிவுகளில் கலந்து கொள்வதற்காக தங்களது படங்களை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் மலையாளத்தில் இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மற்றும் பஹத் பாசில் நடித்த 'ஆவேசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கிராமி விருதுகளுக்கான இசைப்பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படங்களுக்குமே இசையமைத்தவர் இசையமைப்பாளர் சுஷின் சியாம். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பின்னணி இசையும் பாடலும் முக்கிய பங்கு வகித்தன என்பதை மறுக்க முடியாது. சமீபத்தில் தான் இந்தப் படங்களை கிராமி விருதுகளுக்கு அனுப்பும் பணியை செய்து முடித்ததாக கூறியுள்ள அவர், விசுவல் மீடியாவுக்கான சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு என்கிற பிரிவில் ஆவேசம் படத்தையும் சிறந்த ஒலிக்கோர்வை என்கிற பிரிவில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.