ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழகத்தில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரவர் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் ஓட்டளிக்கச் செல்லவில்லை. சில படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படாமல் நடந்ததும் தெரிய வந்துள்ளது.
மணிரத்னம், சிலம்பரசன் 'தக்லைப்' படப்பிடிப்பில் இருப்பதால் அவர்கள் ஓட்டு அளிக்கவில்லை என்கிறார்கள். அது போல 'தி கோட்' படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து திரும்பாத காரணத்தால் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே ஓட்டளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
விஜய்க்கு மட்டும் நேற்று ஓட்டளிக்க வசதியாக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார்களாம். அதேசமயம் படக்குழுவைச் சேர்ந்த வேறு யாருக்கும் ஓட்டளிக்க வசதியாக ஏன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் விஜய், அவர் ஓட்டளித்தால் மட்டும் என்று நினைக்காமல் மற்றவர்களும் ஜனநாயக கடமை ஆற்ற வசதியாக தயாரிப்பாளரை வலியுறுத்தி இருக்க வேண்டுமல்லவா என்கிறார்கள்.