ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'புரூப்'. ஐ ராதிகா என்பவர் இயக்கி உள்ள இந்த படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. ருத்வீர் வதன் என்பவர் கதாநாயகனாக நடிக்க அசோக், ரித்விகா, இந்திரஜா மைம் கோபி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் மே-3ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு தற்போது புரூப் படக்குழு நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்துக்களை பெற்றுள்ளனர்.
புரூப் படக்குழு சார்பில் நாயகன் ருத்வீர், ரஜினியை நேரில் சந்தித்தார். அப்போது படம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார் சாய் தன்ஷிகா. அந்த வகையில் அவருக்கும், ரஜினிக்குமான நட்பை பயன்படுத்தி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் புரூப் படக்குழுவினர்.