தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் மீண்டும் படங்களில் நடிக்கிறார். இருப்பினும் நோய் தாக்கத்தால் அவ்வப்போது சிகிச்சை எடுத்து கொள்கிறார். இன்ஸ்டா தளத்தில் நோயிலிருந்து மீள்வதற்காக என உடலில் டவலை கட்டிக் கொண்டு சிகிச்சை எடுக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார் சமந்தா.
இதன் உடன் பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி உடல் அங்கங்களை கைகளால் மறைத்தபடி இருக்கும் ஒரு போட்டோவும் வெளியாகி இது சமந்தா என சிலர் பரப்பி வந்தனர். மேலும் அந்த போட்டோவை சமந்தா நீக்கவிட்டதாகவும் வலைதளத்தில் வைரலாக்கினர். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், இது சமந்தா தான் வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் இதற்கு பதில் தரும் விதமாக ‛‛உண்மையான பலம் என்பது உங்களை நியாயப்படுத்தவோ, நிரூபிக்கவோ அல்ல...'' என்ற வாசகத்தை குறிப்பிட்டார் சமந்தா. அதாவது அந்த போட்டோ மார்பிங் என குறிப்பிடவே சமந்தா இப்படி பகிர்ந்ததாக தெரிகிறது.