தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'ஜெயிலர், வேட்டையன்' என அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் தற்போது நடித்து வரும் 'வேட்டையன்' படத்தில் அவருக்கான படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. அடுத்து ஜுன் மாதம் முதல் வாரத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் ரஜினிகாந்த்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. 'வேட்டையன்' படப்பிடிப்பில் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் அவர் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்த பிறகே படப்பிடிப்பை வேகமாக நடத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னும் ரஜினிகாந்த் ஓய்வெடுப்பது அனைவருக்கும் தெரிந்ததே. 'கூலி' படப்பிடிப்பிற்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாடு செல்வாரா அல்லது இங்கேயே பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.