தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. தற்போது மலையாளத்தில் நிவின் பாலி உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. அதிலும் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை பதிவிட்டு பார்வையாளர்களை பொறாமை கொள்ள செய்கிறார்.
இருதினங்களாக விக்னேஷ் சிவன் உடன் இணைந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார் நயன்தாரா. இந்நிலையில் ரெசார்ட் ஒன்றில் கார்டன் பகுதியில் மரத்தடியில் விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் ரொமான்ஸ் போட்டோவை பகிர்ந்து, ‛எனக்கு மிகவும் பிடித்த இந்த இடத்திற்கு 5 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ளேன்' என பதிவிட்டுள்ளார் நயன்தாரா. ஆனால் இது எந்த இடம் என அவர் குறிப்பிடவில்லை. குறிப்பாக ஒரு போட்டோவில் நயன்தாரா காது அருகே வைத்துள்ள ஒற்றை பூ ரசிகர்களை கவர்ந்துள்ளது.