ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. தற்போது மலையாளத்தில் நிவின் பாலி உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நயன்தாரா. அதிலும் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை பதிவிட்டு பார்வையாளர்களை பொறாமை கொள்ள செய்கிறார்.
இருதினங்களாக விக்னேஷ் சிவன் உடன் இணைந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார் நயன்தாரா. இந்நிலையில் ரெசார்ட் ஒன்றில் கார்டன் பகுதியில் மரத்தடியில் விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் ரொமான்ஸ் போட்டோவை பகிர்ந்து, ‛எனக்கு மிகவும் பிடித்த இந்த இடத்திற்கு 5 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ளேன்' என பதிவிட்டுள்ளார் நயன்தாரா. ஆனால் இது எந்த இடம் என அவர் குறிப்பிடவில்லை. குறிப்பாக ஒரு போட்டோவில் நயன்தாரா காது அருகே வைத்துள்ள ஒற்றை பூ ரசிகர்களை கவர்ந்துள்ளது.