தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்குமார் அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் அஜித்தின் இன்ட்ரோ பாடல் கட்சியும், ஒரு ஆக்ஷன் காட்சியும் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே நாட்களில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. ஆனால் அந்த செய்தியை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜூன் 7-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி முழுக்க முழுக்க தவறானது என்று தெரிவித்திருக்கிறார் . அதோடு ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெற்ற அன்றைய தினம் மட்டுமே குட் பேட் அக்லி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அதற்கு அடுத்த நாளிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.