திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 'இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சார சர்வதேச மாநாடு' (ஸ்பிக் மெக்கே) நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக திரிபுரா மாநில கவர்னர் இந்திர சேனா ரெட்டி, இசையமைப்பாளர் இளையராஜா, ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி ஆகியோர் பங்கேற்றார்கள்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஐஐடி வளாத்தில் 'இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்' தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இந்த மையம் இளையராஜாவின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. தொடர்ந்து ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது.
இந்த விழாவில் இளையராஜா பேசியதாவது : இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். என்னுடைய அம்மா எனக்கும் என் அண்ணன் பாஸ்கருக்கும் 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். ஆனால், வந்த நாளில் இருந்து, இந்நாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான், இப்போது சென்னை ஐ.ஐ.டி.யில் இசை கற்றல் மையத்தை தொடங்கி உள்ளேன்.
ஒருவர் தண்ணீர் கேட்டால் அவருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. அவருக்கு தாகத்தை ஏற்படுத்த வேண்டும். தாகம் அதிகரிக்கும்போது அவரே தண்ணீரை தேடி கண்டுபிடிப்பார். அதேபோல்தான், படிப்பு மற்றும் வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் தாகம் இருக்க வேண்டும். அப்போது, எந்த இலக்காக இருந்தாலும் நாம் அடைய முடியும். நான் இசையில் சாதித்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்தபோது, எப்படி இருந்தேனோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறேன் என்றார்.