சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான எலக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள ஒரு பார்ம் அவுஸில் நேற்று அதிகாலையில் சென்டிரல் க்ரைம் பிராஞ்ச் நடத்திய சோதனையில் அங்கு போதைப் பொருள் பார்ட்டி நடந்தது தெரிய வந்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபலம் அந்த பார்ட்டியை நடத்தியுள்ளார். அதில் தெலுங்கு சினிமா பிரபலங்கள், டிவி நடிகர்கள், நடிகைகள், மாடல்கள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் 25 இளம் பெண்களும் இருந்துள்ளனர்.
ஞாயிறு இரவு ஆரம்பமாகி திங்கள் அதிகாலை வரையில் அந்த பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டியை நடத்தியவர், மற்றும் போதைப் பொருள் கடத்திய மூவர், மேலும் ஐந்து பேர் என சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த இடத்திலிருந்து போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா மற்றும் 'பீஸ்ட், வாரிசு, ஜெயிலர்' படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றி ஜானி மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டதாக செய்திகள் பரவியது. மூவருமே தனித்தனியாக அது குறித்து மறுப்பும் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் பார்ட்டிகள் நடந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது. சில முன்னணி நடிகர்கள் ஐதராபாத்தில் நடந்த விசாரணையில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில் நேற்றைய பார்ட்டி விவகாரம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.