தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் 'கருடன்' படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியாகி உள்ளது.
'விடுதலை' படத்திற்குப் பிறகு சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம் 'கருடன்'. சசிகுமார், உன்னிமுகுந்தன் இருவருமே சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருக்கிறார்கள். உன்னியிடம் வேலை பார்க்கும் முரட்டு விசுவாசி சூரி. நண்பர்கள் சசி, உன்னிக்கு இடையில் ஒரு கட்டத்தில் ஏதோ பெரிய மோதல் வெடிக்கிறது. அதில் தலையிடும் சூரி என்ன செய்கிறார் என்பதுதான் இந்த 'கருடன்' படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரைப் பார்த்து ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிகிறது.
முரட்டு விசுவாசி, அடியாள் என அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி. சசி, உன்னி இருவருமே நண்பர்களாக இருக்கிறார்கள். கிராமத்துப் பின்னணியில் சில சூழ்ச்சிகளைக் கொண்ட கதை எனத் தெரிகிறது.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். டிரைலரில் வடிவுக்கரசி, சமுத்திரக்கனி மட்டுமே மற்ற கதாபாத்திரங்களில் இடம் பெற்றுள்ளார்கள். ரேவதி சர்மா, ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன், பிரிகடா என நான்கு ஹீரோயின்கள் படத்தில் இருக்கிறார்கள்.
டிரைலரில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாய் அமைந்துள்ளது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு தனி வண்ணத்தில் அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகளும், வசனங்களும் படத்தில் ஹைலைட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
மே 31ம் தேதி வெளியாக உள்ள இப்படம் சூரிக்கு 'விடுதலை' படத்தைப் போல மீண்டும் ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.