தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

எண்பதுகளின் இறுதியில் தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்து வந்த நடிகர் ராமராஜன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள படம் 'சாமானியன்'. அவரது 45வது படமாக உருவாகியுள்ள இந்தப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆர்.ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராமராஜன், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிக்க முடிவு செய்தது ஏன் என்கிற கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, “சினிமாவை விட்டு இத்தனை வருடங்களாக ஒதுங்கவில்லை. நல்ல கதைக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். இத்தனை வருடங்களில் ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என பத்திரிகைகள் எழுதி எழுதி கடைசியில் எனக்கு ஹீரோ வாய்ப்பே தேடி வந்தது.
முன்பு எம்ஜிஆர், சிவாஜி கணேசன் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் பாணியில் சிவாஜியையும் சிவாஜி பாணி படத்தில் எம்.ஜி.ஆரையும் நடிக்க வைக்க ஆலோசனை கூறினார்கள். ஆனால் அப்படி எம்ஜிஆர் நடித்த பாசம், சிவாஜி நடித்த தங்கச் சுரங்கம் என இரண்டு படங்களுமே வரவேற்பு பெறவில்லை. அதன் பின்னர் அவரவருக்கு ஏற்ற கதையிலேயே நடியுங்கள் என்று கூறி விட்டார்கள். அப்படி எனக்கு எந்த கதை சரியாக இருக்கும் என மக்கள் ஒத்துக் கொள்கிறார்களோ அதே வழியில் தான் நான் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்திருக்கிறேன்” என்றார்.




