ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் அஞ்சலி. அவர் கதாநாயகியாக நடிக்கும் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற தெலுங்குப் படம் இந்த வாரம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. விஷ்வக் சென் கதாநாயகனாக நடித்துள்ள இப்டத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான புரமோஷன்களில் தற்போது பிஸியாக இருக்கிறார் அஞ்சலி.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. “கேம் சேஞ்சர்' படம் பற்றி நிறைய பேச ஆசை. ஆனால், நடிகர்கள் யாரும் அப்படத்தைப் பற்றி பேச அனுமதியில்லை. எந்த அப்டேட் ஆக இருந்தாலும் அது ஷங்கர் சார் மூலம்தான் வரும். இல்லையென்றால் தயாரிப்பாளர் தில் ராஜூ சார் சொல்வார். இப்படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன். நானும் ஒரு கதாநாயகிதான். விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்,” என பதிலளித்தார்.
தமிழில் அஞ்சலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் ஜுலை மாதம் வெளியாக உள்ளது.