துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் அஞ்சலி. அவர் கதாநாயகியாக நடிக்கும் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற தெலுங்குப் படம் இந்த வாரம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. விஷ்வக் சென் கதாநாயகனாக நடித்துள்ள இப்டத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான புரமோஷன்களில் தற்போது பிஸியாக இருக்கிறார் அஞ்சலி.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. “கேம் சேஞ்சர்' படம் பற்றி நிறைய பேச ஆசை. ஆனால், நடிகர்கள் யாரும் அப்படத்தைப் பற்றி பேச அனுமதியில்லை. எந்த அப்டேட் ஆக இருந்தாலும் அது ஷங்கர் சார் மூலம்தான் வரும். இல்லையென்றால் தயாரிப்பாளர் தில் ராஜூ சார் சொல்வார். இப்படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன். நானும் ஒரு கதாநாயகிதான். விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்,” என பதிலளித்தார்.
தமிழில் அஞ்சலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் ஜுலை மாதம் வெளியாக உள்ளது.