தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படமாக ‛ராயன்'-ல் நடித்து முடித்துள்ளார். அடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருவதோடு, சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இதன் பின்னர் இப்படம் குறித்து எந்தவித புதிய அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். வாரணாசி மற்றும் உத்திரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.