வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

'விடுதலை' படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக சூரி நடித்த 'கருடன்' படம் நேற்று வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நேற்று வெளியான இப்படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக அமைந்துள்ளன. அதனால், நேற்று மாலை காட்சி, இரவுக் காட்சிகளுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தகவல்.
ஏ சென்டர்களை விட பி அன்ட் சி சென்டர்களில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 3 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களின் வரவேற்பு இன்னும் அதிகமாகும் என்றும் தெரிகிறது.
அதனால், 'விடுதலை' படத்தை அடுத்து இந்தப் படத்திலும் நாயகனாக சூரி வெற்றி பெறுவார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.