துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்திய சினிமாவின் இளம் பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள மொழி அனைத்திலும் பாடி உள்ள ஸ்ரேயா ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும் பாடி உள்ளார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தற்போது ஒரே பாடலை 6 மொழிகளில் அவரே பாடி உள்ளார்.
புஷ்பா படத்தில் இடம்பெறும் 'சூசெகி' என்ற பாடலை, 'அன்காரூன்' என ஹிந்தியிலும், 'சூடான' என தமிழிலும், 'கண்டாலோ' என்று மலையாளத்திலும், 'நொடோகா' என கன்னடத்திலும் 'ஆகுன்னர்' என பெங்காலியிலும் பாடி உள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடலை எழுதி உள்ளனர்.
புஷ்பாவின் முதல் பாகத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடலை நான்கு பாடகிகள் பாடினர். இந்த பாகத்தில் அதுபோன்ற ஒரு பாடலை ஸ்ரேயாவே பாடி உள்ளார்.