தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, காஷ்மிரா, தியாகராஜன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'பி.டி. சார்'. இப்படத்திற்கு சுமாரான விமர்சனங்களும், வரவேற்புமே கிடைத்தது. இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் இப்படத்தை வெற்றிப் படம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களின் 'பி.டி. சார்' படத்தின் வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வருகை தந்து சிறப்பித்த நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி, இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை நேசிக்கும்படியாகக் கொடுத்த படக்குழுவினருக்கு எங்களது நிறுவனம் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு அனைத்தும் உண்மையிலேயே பலன் கொடுத்துள்ளன. மேலும், உங்களது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பி.டி. சார் படம் தற்போது இரண்டாவது வாரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது.